Type Here to Get Search Results !

தருமபுரி பஞ்சப்பள்ளியில் ரூ.5.50 கோடியில் தடுப்பணை – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாற்றில் ஜெல்திம்மனூர் பகுதியில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கான பூமிபூஜை விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பூமிபூஜை செய்து, பணிகளுக்கு தொடக்கமாக அடிக்கல் நாட்டினார். நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் திரு சதிஷ் தலைமையிலாக நடைபெற்றது.


நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தடுப்பணை அமைக்கப்படும் இடம் சின்னாறு அணையின் கீழ்பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தடுப்பணை மூலம் 856 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கவுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் சின்னாறு அணையில் நீர்மட்டம் அதிகரித்து, பாதுகாப்பு கருதி 28,500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதுடன், அதன் பின்விளைவாக ஜெல்திம்மனூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பழைய தடுப்பணைகள் பெரிதும் சேதமடைந்தன. இந்நிலையில், சின்னாற்றின் உபரி நீரை கட்டுப்படுத்தி, அதனை ஜெல்திம்மனூர் பகுதியில் தடுப்பணை மூலம் பிடித்து, அமானிமலலாபுரம், ராஜபாளையம், பஞ்சப்பள்ளி, சாமனூர் உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் சென்றடையும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் இன்றியமையாத தீர்வு கிடைக்கிறது.


நீர் வளத்துறையின் நிதியிலிருந்து ரூ.5.50 கோடி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பொருளாளர் முருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், எம்.வீ.டி. கோபால், முனியப்பன், அடிலம் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் முருகன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் ராஜபாட்ரங்கதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884