பாலக்கோடு, மே 31:
புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ப. ஆனந்தன், முன்னதாக ஜெர்தலாவ் ஊராட்சி மன்றத் தலைவராகவும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர், கட்சியில் நீண்ட காலமாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது நியமனத்திற்கு, மண்டல பொறுப்பாளர் எ.வ.வேலு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், தர்மபுரி எம்.பி. ஆ.மணி உள்ளிட்டோர் பரிந்துரை செய்திருந்தனர்.
நியமனத்தையடுத்து, பாலக்கோடு திமுக அலுவலகத்தில் ஆனந்தன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ரோஜாப்பூ மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் நல்வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் வி.எம். நாகராஜன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி, ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாமலை, கிளைச் செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரளான கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக