Type Here to Get Search Results !

தர்மபுரியில் எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா - ஈரோடு மகேஷ் பங்கேற்பு.


தருமபுரி, ஏப்.28-

தருமபுரி எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நேற்று பெருமிதமாக நடைபெற்றது. கல்லூரி தலைவர் எஸ்.எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடந்த இந்த விழாவில், நிர்வாக இயக்குநர் பி. கந்தசாமி மற்றும் இயக்குநர் ஏ.எஸ். சதீஸ் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் பொன் நேதாஜி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ், மாணவர்கள் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து பேசினார். கல்லூரியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டில் சேரும் 25 மாணவர்களுக்கு 3 ஆண்டு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்றும், முன்னாள் மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள திறமையான மாணவர்களை பரிந்துரை செய்யலாம் என்றும் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.


விழாவில் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழா முடிவில் கல்லூரி முதல்வர் எஸ். கோவிந்தராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் எம். ஸ்ரீதரன், நிர்வாக அலுவலர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies