Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

செல்லமாரம்பட்டி அருகே வாகன விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செல்லமாரம்பட்டி நெடுஞ்சாலையில் நேற்று மாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு கூலி தொழிலாளி உயிரிழந்தார். அவரது பின்னால் பயணித்தவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பாலவாடா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 60) என்ற கூலி தொழிலாளி, தனது உறவினரின் வீட்டில் நிகழ்ந்த விசேஷ நிகழ்ச்சிக்காக தருமபுரி மாவட்டம் முரசுப்பட்டிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், தனது உறவினரான லட்சுமி (வயது 50) என்பவருடன் காரிமங்கலத்தில் உள்ள பல் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மாலை நேரத்தில் இருவரும் மொபட்டில் காரிமங்கலம் நோக்கி பயணித்து வந்தனர்.


இந்த நிலையில், அவர்கள் செல்லமாரம்பட்டி அருகே சென்றபோது, முன்னால் நெல்கதிர் அறுவடைக்காக பயணித்துக் கொண்டிருந்த வேலியந்திரத்தை முந்த முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட்டுடன் மோதியது. மோதலால் மொபட் சறுக்கி அறுவடை இயந்திரத்தின் முன்புறத்தில் விழுந்ததில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த லட்சுமி கடுமையாக காயமடைந்தார்.


தகவலறிந்து விரைந்து வந்த காரிமங்கலம் காவல் துறை அதிகாரிகள், கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்த லட்சுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884