பாடங்களைத் தமிழில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். “ஆசிரியர்கள் ஆங்கிலப்பாடங்களை கற்பிப்போது அதன் பொருளை தமிழில் எடுத்துரைக்கும் பழக்கம் வேண்டும். இதனால் மாணவர்களுக்கு பாடத்தின் உள்ளடக்கம் தெளிவாக புரியும். ஆசிரியர்கள் தங்களது பணி மீது முழு அற்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது பள்ளியில் நடைபெறும் வாசித்தல் பயிற்சிகள், கணிதப்பாடக் கற்றல், ஆசிரியர்களின் பாடக்கற்பித்தல் முறை போன்றவை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டன.
மாநில அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்கள், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கிறது என்ற நம்பிக்கையை பெற்றோரிடையே ஏற்படுத்தும். இது மாணவர்களை அரசு பள்ளிகளுக்கே திரும்ப வழிவகுக்கும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கையாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக