Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் – ராஜஸ்தான் மாநில நபர் கைது

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், இன்று காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் எஸ்.ஐ-கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரை சந்தேகமடைந்த போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 இலட்சம்  மதிப்பிலான 1-டன் குட்கா இருந்தது தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் ராஜஸ்தான் மாநிலம், பர்மீர் பகுதியை சேர்ந்த மகேந்திரா (22), என்பதும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்க்கு குட்கா கடத்தி சென்றதும் தெரிய வந்தது.


அதனை தொடர்ந்து சொகுசு காருடன், குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மகேந்திராவை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து டி.எஸ்.பி மனோகரன் கூறுகையில் தொடர்ந்து குட்கா பொருட்கள் கடத்தல் குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குட்கா கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies