Type Here to Get Search Results !

தேக்லான்கொட்டாய் கிராமத்தில் கட்டாயம் திருமணம் செய்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை - தாய், கனவர் போக்சோவில் கைது.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது.48) கேரளாவில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொளந்தையம்மாள், இவர்களுக்கு வைசாலி (வயது.17) விசால் (வயது.16) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கனவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்  கொளந்தையம்மாள் கனவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த 10ம் தனது மகள் வைசாலியை மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தில் உள்ள கோவிந்தசாமி மகன் தாமோதரன்  (வயது. 29) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வைசாலி நேற்று முன்தினம்  மதியம் வீட்டில் உள்ள உத்தரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் கொளந்தையம்மாள், கனவர் தாமோதரன் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


கட்டாய திருமணம் செய்து வைத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies