Type Here to Get Search Results !

2024ம் ஆண்டின் மை தருமபுரி அமைப்பின் சாதனைப்பயனம்.


தருமபுரி நகரில் பல்வேறு சேவைகளை செய்துவரும் மை தருமபுரி அமைப்பின் சேவைகள்  சேவைகள் குறித்து அதன் நிறுவன தலைவர் திரு. சதிஷ் குமார் ராஜா கூறுகையில், மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1.83 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கி உள்ளோம். வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு வழங்கி உள்ளார். எண்ணங்களின் சங்கமம் NDSO நிறுவனர் அய்யா திரு.ஜெ.பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டார்.


மை தருமபுரி ரத்ததான சேவை மூலம் அவசர ரத்ததான உதவி, முகாம் என மொத்தம் 12,025 அதிகமான அலகு யூனிட் ரத்தம் இதுவரை சேகரித்து கொடுத்துள்ளோம். அது மட்டுமல்லாமல் மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் இதுவரை 99 முறை ரத்ததானம் கொடை அளித்துள்ளார்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 18,2022 முதல் தருமபுரியில் செய்து வருகின்றோம். இதுவரை 123 ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். அதில் ஆண்கள் 102,, பெண்கள் 11, பச்சிளம் குழந்தைகள் 2, ஏழ்மையில் இருந்தோர் 8 ஆகும்.இறந்த ஆன்மாக்களுக்கு ஒகேனக்கல், ராமேஸ்வரம், காசி ஆகிய இடங்களில் ஆத்மாத்ம சாந்தி பூஜை செய்துள்ளனர்.


கேரளா வையநாடு நிலச்சரிவு நிவாரண உதவியாக 400 குடும்பங்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், ஐந்து லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கேரளா அரசிடம் ஒப்படைத்தோம், மை தருமபுரி அமைப்பின் சார்பாக மலைக் கிராமங்களின் NDSO அமைப்பின் மூலம் நடைபெறும் மகாத்மா காந்தி மாலை நேர வகுப்பில் படிக்கும் 600 மாணவர்களுக்கு உயர்தரமான மேலங்கி வழங்கி அவர்களது கல்வியை மேலும் ஊக்குவித்து வருகிறோம். கடந்தாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பள்ளி மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி உள்ளோம்.


தருமபுரி மாவட்ட கிராமத்தில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள 100 கைம்பெண் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கியுள்ளோம், மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் மூலம் எர்ரபையனஹள்ளி,பாப்பாரப்பட்டி கிராமம், தூய்மை பணியாளர்கள், கொல்லப்பட்டி கிராமம், ஏழ்மையில் உள்ளோர், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், மருத்துவ முகாம்கள் மாதந்தோறும் செய்து வருகிறோம்.


மை தருமபுரி அமைப்பின் சேவையை பாராட்டி சென்னை அசுபா நிறுவனத்தினர் சிறந்த சமூக சேவை அமைப்பு விருது, தருமபுரி அங்காளம்மன் பாராமெடிக்கல் சார்பாக சிறந்த சமூக சேவை அமைப்பு விருது, திருப்பூர் அவெர்ணஸ் அப்பா சார்பாக தட்டணுக்கள் கொடையாளர் விருது, டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக சேவா ரத்னா விருது, சுதந்திர தின விழாவில் தருமபுரி ஆட்சியர் அவர்கள் மக்கள் பணியாற்றிமைக்கான விருது, தேசிய தன்னார்வ இரத்ததானம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.


பாராளுமன்ற தேர்தல் போது 100% வாக்குப்பதிவு மற்றும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி, தேசிய தீயணைப்பு தினம், தருமபுரி மாவட்ட பள்ளிகளின் வகுப்பறை கரும்பலைகளுக்கு வண்ணம் பூசுதல், கார்மல் மெட்ரிக் பள்ளி சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு, மாற்றுத்திறனாளி நண்பருக்கு வீல்ஷேர், தீபாவளி கொண்டாட்டமாக பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு புத்தாடை, மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மை தருமபுரி அமைப்பின் சேவைகள் இருக்கும் வரை இங்கு யாரும் ஆதரவற்றோர் அனாதைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதநேயம் காப்போம் மனிதநேயம் போற்றுவோம், என அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies