Type Here to Get Search Results !

ஆதரவற்று இருந்த ஆணின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். இவர்களது நோக்கம் மை தருமபுரி அமைப்பினர் இருக்கும் வரை இங்கு யாரும் ஆதரவற்றோர் அனாதைகள் இல்லை என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர். 


திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஆதரவற்று சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத இவரை திருப்பத்தூரில் இருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இறந்த இவரைப் பற்றி எந்த ஒரு விபரமும் கிடைக்கவில்லை. திருப்பத்தூர் காவல் நிலைய காவலர்கள், மை தருமபுரி அமரர் சேவையினர் இணைந்து  உடலை நல்லடக்கம் செய்தனர். 


மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், ஜெயசூர்யா ஆகியோர் இதய அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 123 ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies