Type Here to Get Search Results !

வெள்ளிசந்தையில் மாற்று கட்சியில் இருந்து விலகி தர்மபுரி எம்.எல்.ஏ முன்னிலையில் 20க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தையில் மாற்று கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணையும் நிகழ்ச்சி காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாடி செல்வம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வெள்ளிசந்தை மற்றும் ஊமையன்கொட்டாய் கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஊமையன் கொட்ன், சின்னா தலைமையில், தர்மபுரி மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் பாமகவில் தங்களை  இணைத்து கொண்டார்.


கட்சியில் புதியதாக இனைந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் சிவகுரு,  உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies