Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் பள்ளிக்கு செல்லாமல் வேறு நபரை வைத்து வகுப்பு நடத்திய ஆசிரியர் பணி இடை நீக்கம் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை.

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி நகர் பகுதியை  சேர்ந்தவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பாலாஜி (47), இவர்  காரிமங்கலம் அடுத்துள்ள இராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு  நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியாக பணியாற்றி வந்தார், இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்க்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து பணிக்கு சரிவர வராமல் இருந்து வந்த பாலாஜி  தனக்கு பதிலாக வேறு ஒருவரை பாடம் நடத்த அனுப்பி உள்ளார்.


இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாதுவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நடத்திய  விசாரணையில், ஆசிரியர் பாலாஜி பணிக்கு வராமல் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பணி செய்ய அனுப்பியது உண்மை என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாலாஜியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.


மேலும் பாலாஜிக்கு பதில் வேறு ஒருவரை ஆசிரியர் பணி செய்ய அனுமதித்தது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884