Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே மினி சரக்கு லாரியில் கடத்தி வந்த 3 இலட்சம் மதிப்பிலான, 1 டன் குட்கா பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை  கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன் அவர்களுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், எஸ்.ஐ.சுந்தரமூர்த்தி, முருகன், ஆனந்தகுமார்  உள்ளிட்ட போலீசார் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, அவ்வழியாக  வந்த மினி சரக்கு லாரியை   போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 இலட்சம்  மதிப்பிலான 1  டன் குட்கா சுமார் 50 மூட்டைகளில்  தக்காளி கிரேடுக்கு மத்தியில் மறைத்து கடத்தி வந்தது  தெரிய வந்தது. லாரி டிரைவரை  பிடித்து விசாரித்ததில் ஈரோடு மாவட்டம்,  சேர்ந்த வின்னர்பள்ளி கிராமத்தை  சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது. 34), என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களுரில் இருந்து கேரளாவிற்க்கு குட்கா கடத்தி வந்ததும்  தெரிய வந்தது.


அதனை தொடர்ந்து மினி சரக்கு லாரியுடன்,  குட்காவை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies