Type Here to Get Search Results !

பாலக்கோடு‌ மாரியம்மன் கோயில் தெருவில் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக குட்கா விற்றவர் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மாரியம்மன் கோயில் தெருவில் ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து பாலக்கோடு போலீசார் மாரியம்மன் கோயில் தெருவில்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பழனி (வயது.50)  என்பவர் தனது பெட்டி கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பெட்டி கடையில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், தூலிப், உள்ளிட்ட 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இது குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies