Type Here to Get Search Results !

2024 தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தில் பாராட்டு பெற்ற மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர். இரத்ததானம், உணவு சேவை, ஆதரவற்ற புனித உடல்கள் நல்லடக்கம் சேவை செய்து வருகின்றனர். 


இரத்ததானம் சேவையில் இதுவரை 11,000 யூனிட் அலகு மேல் வழங்கினார். 2023 ஆம் ஆண்டு தருமபுரி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம், நோயாளிகளுக்கு அவசர இரத்ததான உதவிகள் செய்தமைக்கு மை தருமபுரி அமைப்பை தருமபுரி ஆட்சியர் திருமதி.சாந்தி அவர்கள் பாராட்டி சான்றிதழ் கேடயம் வழங்கினார். 


உடன் அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதா, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் கன்யா ஆகியோர் உடனிருந்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர், கிருஷ்ணன் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884