Type Here to Get Search Results !

மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தங்கப் பதக்கம் பெற்றார்.


சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  18.10.2024 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் சி.சமுத்திரம் தமிழக அளவில் முதலிடம் பெற்று தருமபுரி மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.  வெற்றிப் பெற்ற மாணவனுக்கு பரிசுத் தொகையாக 1 இலட்சமும் மற்றும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

வெற்றிப் பெற்ற மாணவனுக்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த், செயலாளர் காயத்ரி கோவிந்த், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி, கல்லூரி உடற் கல்வி இயக்குநர் ஆர்.சி. கார்த்திக், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884