Type Here to Get Search Results !

பெரியாம்பட்டி நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரேஷன் கடை ஊழியர் பலி-போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மல்லாபுரத்தை  சேர்ந்தவர் முனுசாமி மகன் வேலாயுதம், (வயது.33) இவர் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில், விற்பனையாளராக பனிப்புரிந்து வந்தார், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


இவர், நேற்று மாலை, வழக்கம்போல் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு  சென்று கொண்டிருந்தார், பெரியாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேலாயுதம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. 


இதில் வேலாயுதம் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு  வந்த காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இச்சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை முடிந்து வீட்டிற்க்கு செல்லும் வழியில் விபத்தில் ரேசன் கடை ஊழியர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies