Type Here to Get Search Results !

பெல்லுஅள்ளி கிராமத்தில் ஸ்ரீகொல்லி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெல்லுஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகொல்லிமாரியம்மன் கோயில்  மகா கும்பாபிஷேக விழா இன்று  வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்த விழா கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை, கணபதி பூஜையுடன் தொடங்கியது.  

முக்கிய நாளான செப்டம்பர் 16ம் தேதி இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், மற்றும் நான்கு கால வேள்வி பூஜையுடன்  பூர்ணாஹதி நடைப்பெற்றது. 


இதையடுத்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தம் எடுத்து சென்று  கோயில் உச்சியில் உள்ள  கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீகொல்லிமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு,  பூக்களால் அலங்கரித்து  மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


இந்த விழாவில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விமல்ராஜ், கேசவராஜ்  குடும்பத்ததினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies