Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது 300 கிராம் கஞ்சாவுடன் மொபட் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில்  பாலக்கோடு போலீசார் ரெட்டியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹரிதீபக் (வயது. 20) என்ற வாலிபர் மொபட்டில்  பிளாஸ்டிக் பையை மறைத்து வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து பையை சோதனை செய்ததில் சிறு சிறு பொட்டலங்களாக 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் அளவிலான கஞ்சா இருந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் மொபட்டை  பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies