Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைவு.


நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அருவி மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிக்க தொடர்ந்து இரண்டாவது நாளாக தடையானது நீடித்து வருகிறது.


கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபநிநீராலும் காவேரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் நேற்று முன்தினம் 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று நிலவரப்படி 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் தடை விதித்திருந்தது இந்த நிலையில் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து.


இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 18 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது இந்த நீர்வரத்து குறைந்த அதன் காரணமாக சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது குளிப்பதற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக தடையானது நீடித்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884