Type Here to Get Search Results !

பென்னாகரம் முள்வாடி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு


பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் அமைந்து உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேலாண்மைக் குழு உறுப்பினர் தேர்வு செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


முள்ளுவாடி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சி முருகவேல் தலைமை வகித்தார், அதற்கு சிறப்பு அழைப்பாளர் மேற்பாளராக வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் பங்கேற்றார்.


பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்வதன் நோக்கம் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துகிறது மறுகட்டமைப்பு செய்வது குறித்து எடுத்துரைத்தார், இதனைத் தொடர்ந்து 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது குழுவின் தலைவராக நதியா துணைத்தலைவராக ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சிறப்பு விருந்தினராக பெண்ணாகரம் பேரூராட்சி ஏழாவது ஷானு வார்டு உறுப்பினர் மற்றும் 12வது வார்டு உறுப்பினர் கமலேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அனைவருக்கும் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, மேலும் கல்வியாளர் இர்பான், ஆசிரியை கண்ணகி நன்றி உரை நிகழ்த்தினார்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies