இந்நிகழ்சிக்கு வணிக நிர்வாகவியல் துறை தலைவர், முனைவர், மோகன்தாஸ் வரவேற்புரை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர், முனைவர். இரகுநாதன் மாணவிகள் பங்குச் சந்தையில் எவ்வாறு ஈடுபடுவது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பங்குச் சந்தையை மாணவிகள் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சாதக பாதகங்கள் குறித்து விளக்கினார்.
துணை முதல்வர், முனைவர் முருகேசன், மாணவிகள் பங்குச்சந்தை முதலீட்டை எவ்வாறு இரண்டாம் நிலை வருவாய் ஆதாரமாக மாற்றுவது என்பது குறித்து விளக்கினார். முனைவர்.காந்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
சென்னை பெருநகர பங்குச் சந்தை லிமிடெட்டின் துணைத் தலைவர், திரு.B.M.காஜா மொஹிதீன் பங்குச் சந்தை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் மற்றும் சென்ட்ரல் டெப்பாசிட்டரி சர்வீசஸ் இந்தியா லிமிடெட்டின், தென் மண்டல மேலாளர், M.கார்த்திக் பங்குச் சந்தையின் அபாயங்கள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வதென விளக்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் பேராசிரியை, ஆனந்தலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

