மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டிமாடுகள் மற்றும் நான்குமாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்நோயானது குறிப்பாக பசுக்களையே தாக்குகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல், இரை உண்ணாது இருத்தல், தண்ணீர் குறைவாக அருந்துதல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும்.
நோய் கண்ட பசுக்களின் தோலின் மேல் சிறுகொப்பளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோ, புண்களோ ஏற்படும். மேலும் இந்நோய் கால்நடைகளைத் தாக்காவண்ணம் கால்நடை வளர்ப்போர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டு தங்களது கால்நடைகளை பாதுகாத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpeg)