Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல் படுத்த குறித்து விவாதம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை  கோபால் தலைமையில் நடைபெற்றது. 


கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேனூகா, ஜெகதீஷ், துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.


இந்த கூட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் சீராக வினியோகம் செய்யவும், நபார்டு திட்டத்தில் எர்ரணஹள்ளி ஊராட்சி வாழைத்தோட்டம், குப்பன்கொட்டாய், ரெட்டியூர்  உள்ளிட்ட கிராமங்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கவும்,   கலைஞர் கனவு  இல்லம் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதும் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில்  ஒன்றிய  கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, முத்தப்பன், லதா ராஜாமணி, ஜோதிதுரை, நஞ்சுண்டன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies