தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள கெண்டேனஹள்ளி ஊராட்சி உலகானஹள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் வகுப்பறையில் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்களில் விரிசல்களில் லேசான மழைக்குக்கூட தாக்கு பிடிக்காமல் பழுதடைந்த கட்டிடம் உள்ளது. மேலும் தற்போது கனமழை பெய்து வருவதால் வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இவற்றை முறையாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முறை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


