Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த சவுளுரான் கொட்டாய் கிராமத்தில் நிலத்தகராறில் பெண்னை தாக்கிய 5 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சவுளுரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த  விவசாயி பச்சியப்பன் இவரது மனைவி குப்பம்மாள்  (வயது. 45 ) இவருக்கும் இவரது உறவினரான  ஜெயவேல் குடும்பத்தினருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது, இந்நிலையில் கடந்த 3ம் தேதி  காலை 6 மணிக்கு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த குப்பம்மாளை 


ஜெயவேல் மற்றும்  அவரது மனைவி குமுதா (வயது.33) அவரது தாய் சந்திரா (வயது. 65) 15 வயதுடைய மகன், 13 வயதுடைய மகள்  ஆகியோர் ஒன்றாக சேர்ந்து நீ சம்பாரித்த நிலமா எதற்கு இங்கு வந்தாய் என கூறி கடுமையாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதில் படுகாயமடைந்த குப்பம்மாள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு  பாலக்கோடு போலீசில் கொடுத்த  புகாரின் பேரில் போலீசார் ஜெயவேல் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies