தருமபுரி புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார். அவரது பிரேதத்தை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என தெரியவந்ததையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டார்.
சேலம் இருப்புப்பாதை முதல் நிலை காவலர் அருள் குமார், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மத் ஜாபர், தன்னார்வலர்கள் சண்முகம், ஜெயசூர்யா ஆகியோர் தங்கள் உறவாக எண்ணி இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 105 ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது .