Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பில் பணியிடை பயிற்சி பெற்ற SRM பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மை தருமபுரி அமைப்பில் பணியிடை பயிற்சி பெற்ற SRM பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதிஷ் கூறுகையில், மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகிறோம். பசியால் இருப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம், அவசர ரத்ததான உதவி, மாற்றுத்திறனாளிகள் சேவை, பேரிடர் மேலாண்மை உதவிகள் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம்‌. 


சென்னை மற்றும் திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பணியிடை பயிற்சியினை கடந்த ஒரு மாத காலமாக மை தருமபுரி அமைப்பில் மேற்கொண்டனர்‌. மாணவர்களுக்கு மனிதநேயம், சமூக சேவை, இரத்ததானம் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கான பணியிடை பயிற்சி சான்றிதழை மை தருமபுரி அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, ராகவ் திலக், மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர், என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies