புதுர் மாரியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜூலை, 2024

புதுர் மாரியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து  நேற்று மாலை   பாலக்கோடு போலீசார் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது பாலக்கோடு அடுத்த  புதுர் மாரியம்மன் கோயில் அருகே  வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரை  பிடித்து விசாரித்ததில்  மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த  சரவணன் (வயது.42)) என்பதும் வீட்டில் வைத்து அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது, உடனடியாக  2 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்புள்ள 15   குவாட்டர் பாட்டில்களை  பறிமுதல் செய்து,  கைது செய்து தர்மபுரி  சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad