Type Here to Get Search Results !

முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவி - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களின் கவனத்திற்கு முப்படைகளில் இளநிலை படை அலுவலர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்று வெளி வந்த தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவியானது தற்போது கீழ்க்கண்டவாறு உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

  1. 01ம் வகுப்பு முதல் 05ஆம் வகுப்பு வரை - ரூ.2,000/-
  2. 06ஆம் வகுப்பு முதல் 08ஆம் வகுப்பு வரை - ரூ.4,000/-
  3. 09ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை - ரூ.5,000/-
  4. 11ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை - ரூ.6,000/-


எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் விதவையர்கள் அவர்களது சிறார்களுக்கு வேறு நிதியுதவித்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறவில்லையெனில் முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் அடையுமாறும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies