Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 3000 கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில்   கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்களாக வினாடிக்கு 1500 கன அடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 3000 கன அடியாக நீடித்து வருகிறது. 


இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட கருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884