பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஜூலை, 2024

பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கிராமத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன்  கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலசநீராட்டு,  ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி வழிபாட்டுடன் பூர்ணாஹதி நடந்தது.


இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள்   தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார். பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. 


இதனையடுத்து    ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பல்வேறு திரவியங்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு  மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad