Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.


தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம், முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் பயாஸ் (வயது.34) இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் வங்கியில் மேலாளாராக உள்ளார். கடந்த மாதம்  29ம் தேதி காலை வங்கிக்கு செல்வதற்காக தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டிகான்கொட்டாய் சாலையில் வரும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பயாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது இதில் பயாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்றுக் கொண்டு இன்று பயாஸ் பாலக்கோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies