Type Here to Get Search Results !

தமிழகம் வந்தடைந்தது காவிரி உபரி நீர்.


கர்நாடக அனைகளிலிருந்து நேற்று முன் தினம் வெளியேற்றப்பட்ட உபரி நீர்: தமிழக எல்லை பகுதிக்கு தற்போது வரத் தொடங்கியுள்ளது.


கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு தற்போது 25 ஆயிரத்து 556 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை  தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடியை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80அடியில் 106 அடியே எட்டி உள்ளது. 


கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என இரண்டு அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


நேற்று முன்தினம் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் தற்போது ஒகேனக்கல்லுக்கு வரத் தொடங்கியுள்ளதால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உள்ளது.  


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தற்போது முதல் தடை விதித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. 


மேலும் காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies