Type Here to Get Search Results !

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, அக்ராஹர ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பாலக்கோடு  அரிமா சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு அரிமா சங்க தலைவர் கேசவராஜ் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் தக்காளி கணேசன், பெற்றோர் சங்க தலைவர் தண்டாயுதம், கவுன்சிலர் விமலன். அரிமா சங்க செயலாளர் கிரி, பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கர்மவீரர் காமராஜ் நாட்டிற்க்கு ஆற்றிய தொண்டுகள் என்ற தலைப்பில், நடைப்பெற்ற பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும், மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம்,  பேனா, பென்சில், நோட்டுபுத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சி முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்நாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies