Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், வட்ட செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் ஒன்றிய அரசு சமர்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளான ஓய்வூதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், 10லட்சம் வரை வருமானவரி விலக்கு, உள்ளிட்டவற்றின் மீது எவ்வித அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாநில, மாவட்ட மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies