Type Here to Get Search Results !

ஆதரவற்று உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்ற இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டவுன் பஸ் நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிளாட்பாரத்தில் நோய்வாய்பட்டு இருந்துள்ளார். 


இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் இன்று கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவலர்கள், மை தருமபுரி அமரர் சேவை தமிழ்ச்செல்வன், சண்முகம், ஜெய்சூர்யா, அருண் பிரசாத் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். 

மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 102 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். மரணிப்பவர்களிடமும் மனித நேயம் பகிர்வோம். ஆதரவற்றவர்களுக்கு உறவாய் இருப்போம், என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies