Type Here to Get Search Results !

நீட்தேர்வில் குளறுபடிசெய்யும் என்டிஏவை கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் குளறுபடி செய்யும் என்டிஏவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில்  போராட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமைவகித்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட்,கியூட்,யுஜிசி,நெட் பேன்ற பொது நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகளை செய்யும் என்டிஏவை கண்டித்தும், நீட்நுழைவுதேர்வை ரத்துசெய்யவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலசெயற்குழு உறுப்பினர் பவித்ரன்,மாவட்ட தலைவர் சினேகா,மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாவேல்,ராகுல், இந்திய மாணவர் சங்க சட்டக்கல்லூரி நிர்வாகிகள் நர்மதாதேவி, அரவிந்த், ஜீவா, சத்தியராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.


இந்த போராட்டத்தில் மாணவர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குப்பன், வாலிபர் சங்க மாவட்ட இணைசெயலாளர் குறளரசன் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies