Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் 87 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவுடன் சொகுசுகார் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வழியாக குட்கா கடத்துவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஜூலை, 26ம் தேதி நேற்று காலை 6 மணிக்கு மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை  நெடுஞ்சாலையில் மாரண்டஅள்ளி போலீசார் மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வெள்ளிசந்தை நோக்கி வந்த  சொகுசுகாரை  தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடைசெய்யப்ட 87 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா, உள்ளிட்ட குட்கா பொருட்கள் மறைத்து கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது, அதனை தொடர்ந்து குட்கா பொருட்களுடன் 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த இருவரையும் கைது செய்து விசாரித்ததில் பஞ்சப்பள்ளி அடுத்த நமாண்டஅள்ளியை சேர்ந்த மகேந்திரன் (வயது.46), திருப்பத்தூர் மாவட்டம் அன்னான்டபட்டியை சேர்ந்த வெங்கடேசன் (வயது.41) என்பதும் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மாரண்டஅள்ளி போலீசார்  2 பேரையும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  தர்மபுரி  சிறையில் அடைத்தனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies