Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து 75 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயில் திருட்டு. மர்ம நபர்கள் கைவரிசை.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த எக்காண்டஅள்ளி கிராமத்தில் கடந்த 27ம் தேதி இரவு மின் இணைப்பை துண்டித்து விட்டு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள  டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில்  இருந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். 


மின்சாரம் இன்றி தவித்த கிராம மக்கள், அடுத்த நாள் காலை டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாரண்டஅள்ளி துணை மின் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடி சென்றது கண்டறியப்பட்டது.


இது குறித்து மின்வாரிய உதவி இயக்குநர் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884