Type Here to Get Search Results !

நல்லூர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி - போலீசார் விசாரனை.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணகுமார் (வயது. 53) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது.45) என்பவருக்கும் நிலபிரச்சனையில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார்.

அப்போது அரிவாளுடன் வந்த ரமேஷ் நிலத்தை உழக் கூடாது என கூறி டிராக்டர் டயரை வெட்டி பஞ்சராக்கினார், மேலும் சரவணகுமாரின் தலை, கை கால் பகுதிகளிலும் வெட்டி விட்டு தப்பி சென்றார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து  மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884