Type Here to Get Search Results !

காடுசெட்டிப்பட்டி சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் சொகுசு கார் பறிமுதல்.


தருமபுரி மாவட்டம் , பஞ்சப்பள்ளி அருகே காடுசெட்டிப் பட்டி சாலையில் பஞ்சப்பள்ளி போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை  போலீசார் தடுத்து  நிறுத்த முற்பட்டனர். ஆனால்  கார்  நிற்காமல் சென்றது, இதனால் போலீசார் சொகுசு காரை துரத்தி சென்றனர். கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது, டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார்.

காரை  சோதனையிட்ட போது வாகனத்திற்குள் 35  மூட்டைகளில் சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான  500 கிலோ  அளவிற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, குட்காவுடன் 10 இலட்சம் ரூபாய்  மதிப்பிலான ஸ்கார்பியோ சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.


இது குறித்து வழக்கு பதிவு செய்த பஞ்சப்பள்ளி போலீசார்  தப்பியோடிய தலைமறைவான வரை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies