தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ரா மகொண்டஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது.மேலும் அந்த மரக்கன்றுகளுக்கு அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தாயாரின் பெயர்கள் சூட்டப்பட்டது.
ராமகொண்ட அள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாநிதிபள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி தமிழாசிரியர் சுப்பிரமணி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.