Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த இரண்டு ஆண் புனித உடல்கள் நல்லடக்கம்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த இரண்டு ஆண் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது, இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதம் இருந்தது, இவரை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. அதேப்போல் தருமபுரி மாவட்ட பி1 நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரசாமி பேட்டை பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரத்தில் இறந்துள்ளார். இவரை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. 


ஆதரவற்று இறந்த இரண்டு நபர்களின் புனித உடல்களையும் மை தருமபுரி அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். தருமபுரி ரயில் நிலைய காவலர் தேவராஜ், தருமபுரி நகர காவல் நிலைய காவலர் பாக்யராஜ், மை தருமபுரி சமூக சேவகர் தமிழ்செல்வன், செந்தில் ஆகியோர் புனித உடல்களை நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 94 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். ஆதரவற்றோர்களுக்கு உறவாய் என்றென்றும் மை தருமபுரி அமைப்பினர் இருப்போம். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies