தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்த்தை நிறைவேற்ற போதிய கால அவகாசம் வழங்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டகிளை தலைவர் குணசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வீடுகள் பழுது நீக்கம் செய்தல் திட்டத்திற்கும் உரிய பணியிடங்கள் வழங்கக்கோரியும், பயனார்கள் தேர்வு சார்பாக திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை விரைந்து வெளியிடக்கோரியும், இத்திட்டத்தினை செயல்படுத்திட போதிய கால அவகாசம் வழங்கிடக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பேசினர்.
இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், ஜெகதீசன் மாவட்ட தணிக்கையாளர் தோழர் சதீஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

