Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் கனவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மணியகாரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜீ (வயது.60) இவரது மனைவி முனியம்மாள் (வயது.55) இன்று மாலை 6 மணிக்கு ராஜீ தனது டி.வி.எஸ்.மொபட்டில் தனது மனைவியுடன் தர்மபுரியிலிருந்து மணியகாரன்கொட்டாய் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.


கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த சரக்கு வாகனம் ராஜீ ஓட்டி வந்த மொபட் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மனைவி முனியம்மாள் படுகாயமடைந்தார்.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனியம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies