Type Here to Get Search Results !

கரத்தாரப்பட்டி புதியதேசிய நெடுஞ்சாலை பாலக்கோடு சொல்லும் பிரதான சாலை தரைப்பாலம் பகுதியில் மழைநீர் அதிகமாக தேக்கம், பொதுமக்கள் கடும் பாதிப்பு.


தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு  வழியாக ராயக்கோட்டை  ஓசூர் வரை புதிய  நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதியமான்கோட்டை முதல் ஜிட்டாண்டஹள்ளி வரை சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் 95%பணிகள் முடிந்த நிலையில் கனரக வாகனங்கள், சொகுசு கார், பேருந்துகள் என இயக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் புதிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில்  பெரும்பாலான  பாலம் பகுதிகளில் 2அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். புதிய தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேற போதுமான கால்வாய்கள் அமைக்கப்படாததாலும் தரைப் பாலங்கள் மிகவும் தாழ்வாக உள்ளதாலும் சிறிய மலைக்கு கூட தண்ணீர் தேங்குவதால் அவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பாலக்கோடு நகர பகுதிக்கு செல்லும் கரத்தாரப்பட்டி பாலம் பகுதியில் மழைநீர், குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்டவை கடந்த 6மாதங்களாக பணிகள் முடிக்காமல் உள்ளதால் சாலை குண்டும் குழியுமாகும் சேரும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.


இது குறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தரைப்பாலம் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் போதிய கால்வாய்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies