Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த பெண் புனித உடல் நல்லடக்கம் செய்தனர். இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், இவரது பிரேதத்தை போலீசார்  மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லாதவர் என்பது தெரியவந்தது. இன்று சேலம் இருப்புப்பாதை காவலர் அருள்குமார், மை தருமபுரி அமரர் சேவை சார்பாக முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். 


மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 95 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். ஆதரவற்றோர்களுக்கு உறவாய் என்றென்றும் மை தருமபுரி அமைப்பினர் உள்ளார். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies