Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் கறவை மாடு திருடிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா (வயது.45) இவரது மனைவி இலட்சுமி நேற்று முன்தினம் 19ம் தேதி காலை ரெட்டியூர் சாலையோரம்  தனது கறவை மாட்டை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு சென்றவர்.

மீண்டும் மாலை வந்து பார்த்த போது கறவை மாட்டை காணவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும், கறவை மாடு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று  காலை அதே பகுதியை சேர்ந்த பயாஸ் (வயது. 23) என்பவர் கறவை மாட்டை திருடி சென்று காரிமங்கலம் சந்தையில் விற்றது தெரிய வந்தது.


ராஜா மற்றும் அக்கிராமத்தினர் பயாஸை பிடித்து கறவை மாட்டை கேட்டு அடிக்க தொடங்கினர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று பயாஸை கைது செய்து விசாரித்ததில் மாடு திருடி விற்றதை ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies