Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-வதுசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா தினம் கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 வது- சர்வதேச  யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார்.

மாணவர்களுக்கு பத்மாசனம்,  வீராசனம், உத்தானபாத ஆசனம், நின்ற பாதாசனம், சவாசனம், முத்திரை பயிற்சி, மூச்சுப் பயிற்சி, எளிய வகை தியான பயிற்சி,  மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், அறிவழகன், மாதேஷ், ஆகியோர் மாணவர்களுக்கு செய்து காட்டி  பயிற்சி வழங்கினர், அதனை தொடர்ந்து 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies