.jpeg)
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்த தனசாமி மகன் விஜயரங்கன் என்பவரின் புகாரில் தனக்கு அறிமுகம் ஆன சாம்ராஜ், த/பெ. சின்னசாமிகவுண்டர், எண்.6/223, தீர்த்தகிரி நகர், பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம் மற்றும் அவரது மனைவி புனிதா ஆகிய இருவரும் சேர்ந்து ஆதிசேசன் Finance & Investments என்ற நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தில் ரூ.1,00,000/- முதல் ரூ.10,00,000/- வரை ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி, 03.10.2015-ம் தேதி பாரத ஸ்டேட் வங்கி காசோலை எண்.2532 மூலம் ரூ.2,00,000/- மும், அதே தேதியில் நேரிடையாக ரூ.2,00,000/- மும் ஆக மொத்தம் ரூ.4,00,000/- டெபாசிட் செய்ததாகவும், மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலசீட்டில் கட்டிய தொகை ஆகமொத்தம் ரூ.13,33,040/- பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்ததாகவும், அதனால் மேற்படி சாம்ராஜ் மற்றும் அவரது மனைவி புனிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு விஜயரங்கன் கொடுத்த புகார் மீது 12.10.2022-ம் தேதி சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற எண். 05/2022 ச/பி. 120(b), 406, 420 IPC & 5 of TNPID ACT 1997 ஆக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு கோப்பானது தொடர் புலன் விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவிலிருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் எதிரி சாம்ராஜ் ரூ.36,83,040/- த்தை நான்கு நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏல சீட்டுக்கான பெற்றுக்கொண்டு உறுதியளித்தது போல் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வழக்கில், எதிரி சாம்ராஜ் வயது 50, த/பெ. சின்னசாமி, தீர்த்தகிரி நகர், பாலக்கோடு, தருமபுரி என்பவரை காவல் ஆய்வாளர், பொருளாதார குற்றப்பிரிவு, தருமபுரி அவர்களின் தலைமையிலான குழு தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி எதிரி சாம்ராஜ் கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
எனவே ஆதிசேசன் பைனான்ஸ் & இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெ.கற்பகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக